ADDED : ஜூலை 31, 2025 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஸ்ரீவில்லிபுத்துார் : ஸ்ரீவில்லிபுத்துாரில் தமிழ் இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் எழுத்தாளர் சந்திப்பு கூட்டம் நடந்தது.
தலைவர் கோதையூர் மணியன் தலைமை, பேராசிரியர் சிவனேசன் முன்னிலை வகித்தனர். கவிஞர் முகிலனின் கவிதை படைப்புகள் குறித்து பேராசிரியை மணிமேகலை, வழக்கறிஞர் ரமேஷ், சிவனணைந்த பெருமாள் விமர்சித்து பேசினர். கவிஞர் முகிலன் ஏற்புரையாற்றினார்.இதய நோய்களுக்கான சித்த மருத்துவ சிகிச்சை முறைகள் குறித்து சீனிவாசன் பேசினார். துணை செயலாளர் ரங்கராஜ் நன்றி கூறினார்.