sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விருதுநகர்

/

ரயில்வே ஸ்டேஷனில் தவறிய இளம்பெண் மீட்பு

/

ரயில்வே ஸ்டேஷனில் தவறிய இளம்பெண் மீட்பு

ரயில்வே ஸ்டேஷனில் தவறிய இளம்பெண் மீட்பு

ரயில்வே ஸ்டேஷனில் தவறிய இளம்பெண் மீட்பு


ADDED : மார் 20, 2025 06:46 AM

Google News

ADDED : மார் 20, 2025 06:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தைச் சேர்ந்த அம்மையப்பனின் மனநலம் பாதிக்கப்பட்ட மகள் பாண்டீஸ்வரி 21. இவர் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனில் நேற்று காலை காணாமல் போனார். இவரை விருதுநகர் ரயில்வே போலீசார் உடனடியாக மீட்டனர்.

ராஜபாளையம் அருகே சமுசிகாபுரத்தைச் சேர்ந்தவர் அம்மையப்பன். இவரின் மகள் பாண்டீஸ்வரி மனநலம் பாதிக்கப்பட்டவர். இவருக்கு விருதுநகரில் உள்ள இ.எஸ்.ஐ., மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். இவர்கள் இருவரும் மயிலாடுதுறை செல்லும் ரயலில் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனுக்கு நேற்று காலை 9:15 மணிக்கு இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு செல்வதற்காக வந்தனர்.

ஆனால் ரயிலில் இருந்து இறங்கிய பின் பாண்டீஸ்வரி காணாமல் போனார். இதையடுத்து அம்மையப்பன் விருதுநகர் ரயில்வே போலீசில்புகார் அளித்தார். போலீசார் விருதுநகர் ரயில்வே ஸ்டேஷன் சுற்றிய பகுதிகளில் தீவிரமாக தேடி அரை மணி நேரத்திற்குள் பாண்டீஸ்வரி மீட்டு தந்தையிடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us