ADDED : செப் 14, 2025 03:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் சின்ன பேராலியைச் சேர்ந்தவர் வினோத்குருநாதன் 25. இவரை கொள்ளை, கூட்டுக்கொள்ளை வழக்கில் மேற்கு போலீசார் கைது செய்தனர்.
இவர் மக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்.
இதனால் எஸ்.பி., கண்ணன் பரிந்துரையில் கலெக்டர் சுகபுத்ராவின் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
இதன் படி அவர் செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.