ADDED : பிப் 04, 2025 04:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணர் அழகர்சாமி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் 35. இவரின் 8 வயது மகனுக்கு உடல்நிலை சரியில்லாததால் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சீனிவாசன் உடனிருந்து கவனித்து வந்தார்.
இவர் நேற்று மதியம் 3:30 மணிக்கு அரசு மருத்துவமனை வளாகத்திற்கு அருகே உள்ள ரோட்டில் சென்ற லாரியில் விழுந்து பலியானார். கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

