ADDED : ஆக 23, 2025 05:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகாசி : சிவகாசி அம்மன் கோவில்பட்டி தெருவை சேர்ந்தவர் கவுதம் 29. இவரது வீட்டில் மாடியில் உள்ள அறையில் பழைய பட்டாசுகள் பழைய பொருட்கள் இருந்தது.
ஆக. 19 ல் மாடி அறையில் அவர் இருந்தபோது பட்டாசு, பழைய பொருட்களில் திடீரென தீப்பிடித்ததில் கவுதம் படுகாயம் அடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று காலை இறந்தார்.