/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மண்டல அலுவலக உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் வரவில்லை: தேர்தல்களில் பணிபுரிந்தவர்கள் விரக்தி
/
மண்டல அலுவலக உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் வரவில்லை: தேர்தல்களில் பணிபுரிந்தவர்கள் விரக்தி
மண்டல அலுவலக உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் வரவில்லை: தேர்தல்களில் பணிபுரிந்தவர்கள் விரக்தி
மண்டல அலுவலக உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் வரவில்லை: தேர்தல்களில் பணிபுரிந்தவர்கள் விரக்தி
ADDED : டிச 17, 2024 03:23 AM
விருதுநகர் மாவட்டத்தில் 2021 சட்டசபை தேர்தல், 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல் படி மண்டல அலுவலர், உதவி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
இவர்களுக்கான அலுவலக உதவியாளர்களாக பணிபுரிய வழிகாட்டுதல் வழங்கப்படவில்லை. மாறாக இதரபணிக்காக என 100க்கும் மேற்பட்ட மண்டல அலுவலக உதவியாளர்கள் பணியமர்த்தப்பட்டனர்.
தேர்தல் முடிந்த பின்னர் மண்டல அலுவலர், உதவி அலுவலர்களுக்கு மதிப்பூதியம் வழங்கப்பட்டது. ஆனால் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் என மூன்று தேர்தல்கள் முடிந்தும் மண்டல அலுவலக உதவியாளராக பணியாற்றிய 100க்கும் மேற்பட்டவர்களுக்கு இதுவரை மதிப்பூதியம் வழங்கப்படவில்லை.
இது குறித்து பல முறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த மண்டல அலுவலக உதவியாளராக(குரூப்- டி) அதிக அளவில் சாலை பராமரிப்பு பணியாளர்கள் பணிபுரிந்தனர். மதுரை, கரூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பணிபுரிந்த மண்டல அலுவலக உதவியாளர்களுக்கு மதிப்பூதியம் ஒவ்வொரு முறையும் கணக்கீட்டு ரூ.13 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் விருதுநகர் மாவட்டத்தில் தேர்தலின் போது பணியாற்றியவர்களுக்கு மட்டும் மதிப்பூதியம் வழங்கப்படாமல் பாரபட்சம் காட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க மாநிலத் தலைவர் வைரவன் கூறியதாவது: மாவட்ட நிர்வாகம் தேர்தல் செலவுகளுக்கான இதர பணிகளில் மண்டல அலுவலக உதவியாளர்களை சேர்த்து மதிப்பூதியம் வழங்க முடியும் என மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் 2021 சட்டசபை, 2019, 2024 லோக்சபா தேர்தல்களில் மண்டல அலுவலக உதவியாளர்களாக பணிபுரிந்தும் மதிப்பூதியம் கிடைக்காமல் 100க்கும் மேற்பட்டோர் பரிதவித்து வருகின்றனர்.
எனவே மற்ற மாவட்டங்களில் வழங்கப்பட்டுள்ளதை போல விருதுநகர் மாவட்டத்தில் மண்டல அலுவலக உதவியாளர்களாக பணிபுரிந்தவர்களுக்கு மூன்ற தேர்தல் பணிக்கான மதிப்பூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.