sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்

/

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்

இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறியை விற்றால் தண்டனை: குண்டர் தடுப்பு சட்டமும் பாயலாம்


ADDED : செப் 05, 2011 11:57 PM

Google News

ADDED : செப் 05, 2011 11:57 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வரும் 15ம் தேதி முதல், தமிழக அரசு வழங்கவிருக்கும், இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை விற்பனை செய்தால், குடிமைப் பொருள் வழங்கல் சட்டப்படி தண்டனை அளிக்க, அரசு முடிவு செய்துள்ளது.



தமிழகத்தில் அனைத்து பச்சை நிற ரேஷன்கார்டுதாரர்களுக்கு, இலவசமாக மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவை அரசின் சார்பில், இலவசமாக வழங்கப்படுகிறது.

வரும் 15ம் தேதி அண்ணாதுரை பிறந்தநாளில், முதல்வர் ஜெயலலிதா இலவச பொருட்கள் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்கிறார்.முதற்கட்டமாக தலா, 25 லட்சம் பொருட்கள், ரேஷன்கார்டுதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளன. இதற்கான பணிகளில் சிறப்புத் திட்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழக உணவுப்பொருள் வழங்கல் கழகத்தின் சார்பில், டெண்டர் அறிவிக்கப்பட்டு, பல கட்ட ஆய்வுக்குப் பின், இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின் விசிறி தயாரிக்க, 18 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றின் முதற்கட்ட வினியோகத்திற்காக, தமிழக அரசு 1,250 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மூன்று பொருட்களும் ஒரே பேக்கிங்காக அமைத்துத் தர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.



இதுகுறித்து, சிறப்புத் திட்ட அமலாக்கத் துறையில் இடம்பெற்றுள்ள அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் சார்பில் வழங்கப்பட உள்ள இலவச பொருட்கள், தரமான நிறுவனங்களால் தயாரிக்கப்படுகின்றன. இதில் எந்தவித முறைகேடுக்கும் இடமின்றி நெறிமுறைகள் வகுத்து, வெளிப்படையான டெண்டர் மூலம் நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.நலத்திட்டங்களில் கிடைக்கும் பொருட்களை, எந்த காரணம் கொண்டும், விற்பனை செய்யக் கூடாது. எளியவர்களாக இருப்போர், வாங்கும் சக்தியில்லாதோர் ஆகியோரின் வாழ்வை முன்னேற்றவே இந்த பொருட்கள் வழங்கப்படுகின்றன.



அரசின் நோக்கத்திற்கு மாறாக, இந்த பொருட்களை விலைக்கு விற்பதும், விலை கொடுத்து வாங்குவதும் சட்டப்படி குற்றம். அன்பளிப்பாக அரசு வழங்கும் பொருட்களை விற்பனை செய்வோர் மட்டுமின்றி, வாங்குவோருக்கும் தண்டனை தர சட்டத்தில் இடமுள்ளது. இந்திய அடிப்படை குடிமைப் பொருள் சட்டப்படி தண்டிக்க முடியும். இலவச அரிசி விற்பவர்கள் மீது, குண்டர் சட்டம் பாயும் நடவடிக்கையும் இதற்குப் பொருந்தும்.



கடந்த ஆட்சியில், இலவசமாக வழங்கப்பட்ட கலர் 'டிவி' பல இடங்களில் 500 முதல் 1,500 ரூபாய் வரை விற்றது. இதில், ஒரு சிலர் மீது மட்டும் போலீசார் வழக்கு பதிந்தனர். பல தனியார் ஓட்டல்கள், அலுவலகங்கள், பெட்டிக் கடைகள், அரசு அலுவலகங்கள், கவுன்சிலர், எம்.எல்.ஏ., அலுவலகங்கள் மற்றும் அரசியல்வாதிகளிடம் கலர் 'டிவி'க்கள் இருந்தன.அன்பளிப்பாக வழங்கப்படும் மிக்சி, கிரைண்டர், மின் விசிறிக்கு இதுபோன்ற நிலை ஏற்படாமல், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொருட்களின் மீது, 'இது அரசின் அன்பளிப்பு; விற்பனைக்கல்ல' என்ற வாசகங்களை அச்சடித்தோ அல்லது அழிக்க முடியாத வகையிலோ பதிக்க, பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us