செயின் பறிப்பு சம்பவத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் கைது
செயின் பறிப்பு சம்பவத்தில் தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் மகன் கைது
ADDED : ஆக 07, 2011 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: வழி்ப்பறியில் ஈடுபட்டு பெண்ணிடம் 4 பவுன் நகையை பறித்ததாக தி.மு.க.ஒன்றிய கவுன்சிலர் மகனை போலீசார் கைது செய்தனர்.
ஆத்தூர் அப்பம்மசத்திரம் பகுதியைச் சேர்ந்த பி்ச்சாக் கவுண்டர் மனைவி கவிதா (30) .இவர் சம்பவத்தன்று அப்பகுதியில் சென்று கொண்டிருந்த போது கவிதாவிடம் வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம ஆசாமி அவரது கழுத்தில் இருந்த 4பவுன் தங்க செயினை பறித்து தப்பியோட முயன்றார். அவரை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர் அப்பகுதி தி.மு.க.ஒன்றிய கவுன்சில் துரைசாமி மகன் ராமச்சந்திரன் (33) என தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.