ADDED : ஜூலை 25, 2011 09:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே அமைந்துள்ள வெண்ணெய் மலை, புகழிமலை முருகன் கோயில்களில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்த காவடி, இளநீர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கரூர் மாவட்டம் வெண்ணெய் மலை மற்றும் புகழிமலையில் அமைந்துள்ள முருகன் கோயில்கள் பிரசித்தி பெற்றவை. இங்கு ஆடி கிருத்திகையை முன்னிட்டு, பக்தர்கள் தீர்த்த காவடி, இளநீர் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். புகழிமலை இளநீர் காவடி மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.

