sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஆவணங்கள் மிஸ்சிங்: சி.பி.ஐ., மீது புகார்

/

ஆவணங்கள் மிஸ்சிங்: சி.பி.ஐ., மீது புகார்

ஆவணங்கள் மிஸ்சிங்: சி.பி.ஐ., மீது புகார்

ஆவணங்கள் மிஸ்சிங்: சி.பி.ஐ., மீது புகார்


ADDED : ஆக 01, 2011 11:49 PM

Google News

ADDED : ஆக 01, 2011 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: 'ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான சில ஆவணங்களை, கோர்ட்டில், சி.பி.ஐ., தாக்கல் செய்யவில்லை.

எனவே, இதுகுறித்த அனைத்து ஆவணங்களையும், கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்' என, ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் ஷாகித் பல்வா, நேற்று கோர்ட்டில் கூறினார்.



ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் புரமோட்டர் ஷாகித் பல்வா சார்பில், சி.பி.ஐ., சிறப்பு கோர்ட்டில் ஆஜரான வழக்கறிஞர் மஜீத் மேமன் கூறியதாவது: ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக, அப்போதைய மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியும், அப்போதைய சொலிசிட்டர் ஜெனரல் வாகன்வாதியும், முக்கிய விவாதம் நடத்தியுள்ளனர். இது தொடர்பான அனைத்து விதமான ஆவணங்களையும், சி.பி.ஐ., கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். குற்றப்பத்திரிகை உட்பட, சி.பி.ஐ., தாக்கல் செய்த பல ஆவணங்களில் குறிப்பிட்ட சில விஷயங்கள் இடம் பெறவில்லை. 2007 டிசம்பர் 26ல், பிரதமருக்கு, அப்போதைய அமைச்சர் ராஜா எழுதிய கடிதம் குறித்த விஷயத்தை, அரசு தரப்பு வழக்கறிஞர், இந்த கோர்ட்டில் வாதாடியபோது, தெரிவிக்கவில்லை. இதை ஏன் தெரிவிக்கவில்லை என்பதையும், அவர் கோர்ட்டில் விளக்கவில்லை.








      Dinamalar
      Follow us