ADDED : ஆக 11, 2011 03:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேனி: தேர்தல் வழக்கு தொடர்பாக, 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட சீமான் என்பவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 2006ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் ஆண்டிபட்டி தொகுதியில் சீமான் போட்டியிட்டார். அப்போது, தேர்தல் அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோர்ட்டில் ஆஜராகும்படி பல முறை நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகாததால், அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சீமான் தேனி பகுதியில் டுடோரியல் கல்லூரிகள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

