sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்

/

தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்

தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்

தமிழக தறிகளிடமிருந்தே வேட்டி, சேலை வாங்கப்படும்


ADDED : செப் 10, 2011 01:14 AM

Google News

ADDED : செப் 10, 2011 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'தமிழகத்தில், பொங்கல் பண்டிகைக்கு அரசு மூலம் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்கு, தமிழகத் தறிகளிலிருந்து மட்டுமே வேட்டி, சேலைகள் வாங்கப்படும்.

பிற மாநிலங்களிலிருந்து வாங்கப்பட உள்ளதாகக் கூறப்படுவது தவறான தகவல்' என்று, கோ - ஆப்டெக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.



தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்திற்குத் தேவையான, மொத்த வேட்டி, சேலைகளை கைத்தறி, பெடல் தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்கங்களால் உற்பத்தி செய்து வழங்க முடியாத நிலையில், தேவையான வேட்டி, சேலைகளை வெளி மாநிலங்களிலிருந்து, கோ - ஆப்டெக்ஸ் மூலம் வாங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது.



இது குறித்து, கோ - ஆப்டெக்ஸ் மேலாண்மை இயக்குனர் உமாசங்கர் கூறியதாவது:தமிழக அரசின் இலவச வேட்டி, சேலை திட்டத்தில், வரும் 2012ம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு 1 கோடியே 70 லட்சம் வேட்டிகள், 1 கோடியே 70 லட்சம் சேலைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன. இத்திட்டத்திற்கு, கைத்தறி, பெடல் மற்றும் விசைத் தறி கூட்டுறவு நெசவாளர் சங்கங்களில் உருவாக்கப்படும் மொத்த வேட்டி, சேலைகளும் வாங்கிக் கொள்ளப்பட்ட பிறகு, மீதம் தேவைப்படும் வேட்டி, சேலைகளை பிற மாநில தறிகளிலிருந்து கூட்டுறவு சங்கங்கள் மூலம் வாங்குவதைவிட, நேரடியாக பொது ஏல ஒப்பந்தம் மூலம் வாங்கினால், செலவு குறைய வாய்ப்புள்ளது.இது குறித்து, அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் மூலம், தமிழகத்தில் உள்ள தறிகளிலிருந்தே வேட்டி, சேலைகள் வாங்கப்பட உள்ளன. வெளி மாநிலங்களிலிருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட உள்ளதாகப் பேசப்படுவது தவறான தகவல்.இவ்வாறு, உமாசங்கர் கூறினார்.








      Dinamalar
      Follow us