ADDED : செப் 25, 2011 12:08 PM
திருத்தணி: மனைவியை பிரிந்த சோகத்தில் கணவன், தந்தையை தீவைத்து எரித்து கொலை செய்துவிட்டு தானும் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திருத்தனி அருகே தொலுதாவூரைச் சேர்ந்தவர் நாராயணன்,60 இவர் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர். இவரது மகன் சுரேஷ்,35. சுரேஷூக்கும், ரோஸ், 28 என்பவருக்கும் கடந்தாண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன் உள்ளார்.இந்நிலையில் சுரேஷ், ரோஸ் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கடந்த 6 மாதங்களாக ரோஸ், தனது தாய் வீட்டில் இருந்து வருகிறார். மனைவி ரோஸை, குடும்பம் நடத்த வருமாறு சுரேஷ் பலமுறை கேட்டுள்ளார். ஆனால் ரோஸ் வரவில்லை. இதனால் விரக்கதியடைந்தார். சம்பவத்தன்று இரவில் தூங்கி கொண்டிருந்த தனது தந்தை நாராயணசாமி மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீவைத்து கொலை செய்தார். பின்னர் இவரும் தீக்குளித்தார். ஆபத்தான நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சுரேஷ் இறந்தார்.