sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை

/

கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை

கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை

கருப்பட்டியில் நகை அடகு கடையில் 118 பவுன் கொள்ளை


ADDED : அக் 07, 2011 09:10 PM

Google News

ADDED : அக் 07, 2011 09:10 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பட்டி : மதுரை மாவட்டம் கருப்பட்டியில் அன்னப்பூரணி லட்சுமி நகை அடகு கடையில் 118 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

கொள்ளையர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. நாகமலைபுதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தவுட்டுராஜன், 60. இவர் சோழவந்தான் அருகே கருப்பட்டியில் நகை அடகு கடை வைத்துள்ளார். நேற்று முன்தினம் மாலை கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார்.

நேற்று காலை 6 மணியளவில் அந்த வழியாக சென்றவர்கள் அடகு கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு, தவுட்டுராஜனின் சகோதரர் பொன்னுச்சாமிக்கு தகவல் தெரிவித்தனர். பொன்னுச்சாமி பார்த்த போது கடையின் கிரில்கேட், உட்புற கதவுகள் உடைக்கப்பட்டு, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரிந்தது. சோழவந்தான் போலீசில் அவர் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் பாலமுருகன், போலீசார் சம்பவயிடத்தில் விசாரித்தனர். 118 பவுன் நகைகள், 5 ஆயிரத்து 359 கிராம் வெள்ளி நகைகள், ரொக்கம் ரூ.25ஆயிரம் ஆகியவை கொள்ளை போனது தெரிந்தது. மதுரையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். கொள்ளையர்களை பிடிக்க ஏ.டி.எஸ்.பி., மயில்வாகனன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.








      Dinamalar
      Follow us