ADDED : ஜூலை 14, 2011 10:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மும்பை:மும்பை தாக்குதல் சம்பவம் குறித்த இடத்தை ஆய்வு செய்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மும்பையில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அதில், மும்பை குண்டு வெடிப்பு சம்பவம் பயங்கரவாதிகளின் திட்டமிட்ட சதி, குண்டு வெடிப்பு குறித்து முன்கூட்டியே எந்த தகவலும் கிடைக்கவில்லை.வெடிகுண்டு வெடிப்பில் அமோனிய நைட்ரேட் பயன்படுத்தப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. .குற்றவாளிகளை பிடிக்க புனே, டில்லி அதிகாரிகள் விரைந்துள்ளனர். ரிமோட் கன்ரோலின் உதவியின்றி குண்டுகள் வெடித்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தில் 17 பேர் பலியாகியுள்ளனர், 133 பேர் காயம் அடைந்துள்ளனர். ,அதில் 23 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. தொடர் குண்டு வெடிப்பு குறித்து தேசிய புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது என்றார்.