சமச்சீர் தீர்ப்பு: வெற்றி விழா நடத்துகிறது தி.மு.க.,
சமச்சீர் தீர்ப்பு: வெற்றி விழா நடத்துகிறது தி.மு.க.,
ADDED : ஆக 12, 2011 09:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பை வரவேற்று, அதை ஒரு வெற்றி விழாவாக கொண்டாட தி.மு.க., முடிவு செய்துள்ளது.
இதற்காக மாநிலம் முழுவதும் வரும் 19ம் தேதி தி.மு.க., இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பாக வெற்றி விழா பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தென் சென்னையில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் தி.மு.க., தலைவர் கருணாநிதி, திருவள்ளூரில் க. அன்பழகன், காஞ்சிபுரத்தில் மு.க. ஸ்டாலின், திருச்சியில் துரைமுருகன், திருவண்ணாமலையில் பொன்முடி, மதுரையில் கோவை. மு. ராமநாதன் உள்ளிட்ட தலைவர்கள் விழாவிற்கு தலைமை தாங்குகிறார்கள்.

