sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொட்டிலில் குழந்தைகள் பெற்றோரே கவனம்

/

தொட்டிலில் குழந்தைகள் பெற்றோரே கவனம்

தொட்டிலில் குழந்தைகள் பெற்றோரே கவனம்

தொட்டிலில் குழந்தைகள் பெற்றோரே கவனம்


ADDED : செப் 06, 2011 11:58 PM

Google News

ADDED : செப் 06, 2011 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: ''தொட்டிலில் இடும் குழந்தைகள் குறித்து பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்,'' என மதுரை தேவதாஸ் சிறப்பு மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன் கூறியுள்ளார்.



அவர் கூறியிருப்பதாவது: குழந்தை வளர்ப்பில் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும்.

குழந்தைகளை தங்கள் கண்பார்வையில் வைத்து பாதுகாக்க வேண்டும். தொட்டிலில் இடும்போதும் கழுத்தில் இறுக்கமான கயிறுகள் அணிவதை தவிர்க்க வேண்டும். மதுரை கே.புதூர் சூரியாநகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் 9 மாதக் குழந்தை தொட்டிலில் இருந்து தானாக கீழே இறங்கியபோது, அதன் கழுத்தில் அணிந்திருந்த தாயத்து கயிறு தொட்டிலில் சிக்கியது. குழந்தையின் தொண்டையை அக்கயிறு இறுக்கியதை யாரும் கவனிக்கவில்லை. குழந்தையின் சுவாசம் தடைபட்டு மயக்க நிலைக்கு ஆளானது. உடல் நீலநிறமாகிவிட்டது. அதன் பிறகே அக்குழந்தையை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து செயற்கை சுவாசம் அளிக்கப்பட்ட பின், குழந்தை மீட்கப்பட்டது. எனவே தொட்டிலில் இடும் குழந்தைகள் மீது பெற்றோர் கவனமாக இருப்பது அவசியம், என்றார்.








      Dinamalar
      Follow us