ADDED : செப் 20, 2011 07:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பரஞ்ஜோதி மீது, பல்வேறு புகார்கள் எழுந்ததால், அவருக்கு பதில், வேறு ஒருவர் அறிவிக்கப்படலாம் என, கட்சியினர் எதிர்பார்த்த நிலையில், நாளை, அவர் வேட்பு மனு தாக்கல் செய்வதாக அ.தி.மு.க., திருச்சி மாநகர் மாவட்டச் செயலர் மனோகரன், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து அ.தி.மு.க., வேட்பாளர் மாற்றப்படுவார் என்ற பரபரப்பு ஓய்ந்துள்ளது.

