sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?

/

திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?

திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?

திருச்சி இடைத்தேர்தலில் தே.மு.தி.க., போட்டி?


ADDED : செப் 25, 2011 06:01 AM

Google News

ADDED : செப் 25, 2011 06:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: உள்ளாட்சித்தேர்தலில் கழற்றிவிட்ட, அ.தி.மு.க.,வுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில், திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளரை, தே.மு.தி.க., கட்சித்தலைவர் விஜயகாந்த் அறிவிப்பாரா என்பது நாளைக்குள் தெரிந்துவிடும்.கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுடன் இணைந்து, தே.மு.தி.க., தேர்தலை சந்தித்தது.

தி.மு.க.,வை மூன்றாவது இடத்துக்கு தள்ளி, பிரதான எதிர்க்கட்சியாக சட்டசபைக்குள் நுழைந்தது.'உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப் போட்டி' என்பதை, அனைத்து பதவிகளுக்கும், அ.தி.மு.க., வேட்பாளர்களை அறிவித்து, தே.மு.தி.க.,வுக்கு அதை மறைமுகமாக தெரிவித்து, அ.தி.மு.க., 'ஷாக்' கொடுத்தது.



வேறு வழியில்லாத நிலையில், தே.மு.தி.க.,வும் வேட்பாளர்கள் பட்டியலை தனியாக அறிவித்து ஆறுதலை தேடியுள்ளது. போட்டியிடுவதா? வேண்டாமா? என்ற இருவேறு மனநிலையில் கட்சியினர் பரிதவிக்கின்றனர்., தே.மு.தி.க.,வும் தற்போது தயாராகி வருகிறது. அதற்கு தகுந்த களமாக, திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலை, தே.மு.தி.க., குறி வைத்துள்ளது .



இதுகுறித்து தே.மு.தி.க.,வின் மாநில நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:உள்ளாட்சி பதவிகளை பெற்றுவிடுவதன் மூலம், அ.தி.மு.க.,வுக்கு நிகராக தே.மு.தி.க., வளர்ந்து விடக்கூடாது என்று ஜெயலலிதா பயப்படுவது, வேட்பாளர் பட்டியல் வெளியீடு மூலம் உறுதியாகி விட்டது.

எங்களுக்கு வலுவான ஓட்டுவங்கி உண்டு என்பதை கடந்த தேர்தல்களில் நாங்கள் நிருபித்து காட்டியுள்ளோம். அதனால், 'உள்ளாட்சித்தேர்தலில் தனித்துப்போட்டி' என்ற முடிவை விஜயகாந்த் எடுத்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னதாக, எங்களை, 'நம்ப வைத்து கழுத்தறுத்த' அ.தி.மு.க.,வுக்கு, 'ஷாக்' கொடுக்க, திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தலில் தனித்து போட்டியிடவும் விஜயகாந்த் ஆலோசிக்கிறார்.



திருச்சி இடைத்தேர்தல் மூலம், தமிழகத்தின் இரண்டாவது பெரிய கட்சி, தே.மு.தி.க.,தான் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபிக்க தயாராக உள்ளோம். எங்கள் எண்ணங்களை தலைமை கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம்.இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய, நாளை இறுதிநாள் என்பதால், இன்று அல்லது நாளை காலைக்குள் இடைத்தேர்தல் போட்டி அல்லது தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து விஜயகாந்த் அறிவிப்பார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.திருச்சி மேற்குத்தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது இன்றுவரை உறுதியாக தெரியாத நிலையில், இடைத்தேர்தலில் போட்டியிட, தே.மு.தி.க.,வில் பலத்த போட்டி நிலவுகிறது.



சட்டசபை தேர்தலில் லால்குடி தொகுதியில் போட்டியிட்டு தோற்ற செந்தூரேஸ்வரன், முன்னாள் மாவட்டச்செயலர் சக்ரவர்த்தி, கவுன்சிலர் ஜெரால்டு, மாநில வர்த்தக அணி துணைச்செயலர் விஜயகுமார், மாநகரச்செயலர் விஜயராஜன், மகளிரணிச்செயலர் வக்கீல் சித்ரா உள்ளிட்ட பலர் களமிறங்க காத்திருக்கின்றனர்.








      Dinamalar
      Follow us