UPDATED : செப் 27, 2011 09:02 PM
ADDED : செப் 27, 2011 08:39 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்: சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி 21வது வார்டு கவுன்சிலராக உள்ளவர் மோகன்.
இவர் அ.தி.மு.க., நகர செயலாளராகவும் உள்ளார். இவர் தனது போட்டியிடும் வார்டுகளில் தனது பெயர் மற்றும் எம்.எல்.ஏ., பெயர் பொறிக்கப்பட்ட 50 ரூபாய் மதிப்புள்ள தட்டை வாக்காளர்களுக்கு விநியோகம் செய்து வந்தார். இதனையறிந்த தி.மு.க.,வினர் நகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் மனு அளித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

