ADDED : அக் 02, 2011 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர், அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ., பழனிசாமி, மாயனூர் காவிரியாற்று பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் விதிமுறைகளை மீறி மணல் அள்ளியதாக, வி.ஏ.ஓ., நீலமேகம் கொடுத்த புகாரின் படி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில், கரூரை அடுத்த நெரூர் பகுதியில் ராமசாமி அய்யர், முத்தையா ஆகியோருக்கு சொந்தமான இடத்தில், கடந்தாண்டு டிச., 15 ல், அரசு அனுமதி பெறாமல் மணல் அள்ளியதாக, தி.மு.க., எம்.எல்.ஏ., பழனிசாமி, சுந்தரேசன், கிரிராஜன் உட்பட சிலர் மீது, வாங்கல் போலீஸ் ஸ்டேஷனில் செப்., 30 ல், வி.ஏ.ஓ., தங்கராஜ் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

