sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உஷார் நிலையில் சென்னை

/

உஷார் நிலையில் சென்னை

உஷார் நிலையில் சென்னை

உஷார் நிலையில் சென்னை


ADDED : செப் 07, 2011 10:40 PM

Google News

ADDED : செப் 07, 2011 10:40 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டில்லி ஐகோர்ட் வளாகத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து சென்னை முழுவதும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.டில்லி ஐகோர்ட்டின் 5ம் எண் நுழைவாயிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது.

2வது முறையாக குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதால், சென்னையின் முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டனர். சென்னை ஐகோர்ட் வளாகத்தின் அனைத்து நுழைவாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர மக்கள் அதிகம் கூடும் இடங்களான பிராட்வே பஸ் நிலையம், சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பஸ் நிலையம் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்த பிறகே அனுமதிக்கின்றனர். பிளாட்பாரம் மற்றும் ரயில் பெட்டிகளிலும் மூன்று மோப்ப நாய்கள் சுழற்சி முறையிலும், 40க்கும் மேற்பட்ட போலீசாரும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சந்தேகப்படும்படியான நபர்களை பிடித்து போலீசார் விசாரணையும் நடத்தி வருகின்றனர். பாதுகாப்பு குறித்து வடசென்னை துணை கமிஷனர் அன்பு கூறும்போது, ''ஐகோர்ட்டில் அனைத்து வாயில்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவிர பஸ் மற்றும் ரயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்,'' என்றார்.






      Dinamalar
      Follow us