ADDED : அக் 01, 2011 06:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆத்தூர்:ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி கிராமம், மாரியம்மன் கோவில் தெருவைசேர்ந்தவர் மணி (எ) சுப்ரமணி (31).
அவர் மீது ஏத்தாப்பூர், வீரகனூர் ஸ்டேஷன் பகுதிகளில் இரு கொலை வழக்கு, ஆள் கடத்தல், கொலை முயற்சி, வழிப்பறி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.பல மாதங்களாக தலைமறைவாக இருந்த சுப்ரமணியை, போலீஸார் கைது செய்தனர். அவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு, மாவட்ட கலெக்டருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர்.அதன்பேரில், சுப்ரமணி மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அதிரடியாக கைது செய்தனர்.

