sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 11, 2025 ,கார்த்திகை 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இருட்டில் சிக்கிய வேட்பாளர்கள்

/

இருட்டில் சிக்கிய வேட்பாளர்கள்

இருட்டில் சிக்கிய வேட்பாளர்கள்

இருட்டில் சிக்கிய வேட்பாளர்கள்


ADDED : அக் 07, 2011 10:09 PM

Google News

ADDED : அக் 07, 2011 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரையில் தே.மு.தி.க., வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவர் விஜயகாந்த் செல்லூரில் பிரசாரம் செய்தார்.

தே.மு.தி.க., கவுன்சிலர்கள் மற்றும் இரண்டு மார்க்சிஸ்ட் பெண் வேட்பாளர்கள் ஒரு லாரியில் கும்பிட்டவாறு நின்று கொண்டிருக்க, 'இதோ வருகிறார், வந்து விட்டார்' என ஒரு கட்சி தொண்டர் மைக்கில் ஒரு மணிநேரம் 'அண்டப்புழுகு' விட்டுக் கொண்டிருந்தார்.

இயற்கைக்கு கூட இது பிடிக்கவில்லை போலும். இடி, மின்னலுடன் வந்த மழை அப்பகுதியை இருட்டாக்கியது. விஜயகாந்த் வந்த போது ஒரே ஒரு லைட் எரிந்து கொண்டிருக்க, அந்த இடத்தில் பிரசார வானத்தை நிறுத்தினர். வெளிச்சம் குறைவாக இருந்ததால், பிரசார வானத்தில் இருந்த விளக்கு வெளிசத்தில் அவர் பேசத்துவங்கினார். பாவம் கவுன்சிலர் வேட்பார்கள் நின்றிருந்த இடம் கும்மிருட்டாக இருந்தது. விஜயகாந்தாலும் அவர்களை துல்லியமாக பார்க்க முடியவில்லை. 'நமக்காக தலைவர் பிரசாரத்திற்கு வந்த போது மின்சாரமும், ஜெனரேட்டர் மூலம் வைத்திருந்த போக்கஸ் லைட்டும் இப்படி மோசம் செய்துவிட்டதே' என, பெண் கவுன்சிலர்கள் ஒருவருக்கொருவர் குமுறியதுடன், ஆரம்பமே ரொம்பவே கண்ணைக் கட்டுதே என பெரு மூச்சுவிட்டு லாரியில் இருந்து இறங்கி நடையை கட்டினர்.








      Dinamalar
      Follow us