sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 05, 2026 ,மாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரம்ஜான்சிந்தனைகள் -11

/

ரம்ஜான்சிந்தனைகள் -11

ரம்ஜான்சிந்தனைகள் -11

ரம்ஜான்சிந்தனைகள் -11


ADDED : பிப் 28, 2026 11:55 PM

Google News

ADDED : பிப் 28, 2026 11:55 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெற்றோரை நேசிப்பீர்

தற்காலத்தில் பெற்றோர் சொல்லை கேட்கும் பிள்ளைகளை பார்ப்பது அரிதாகி விட்டது.

அதிலும் சிலர் பெற்றோரிடம் பணம் இருந்தால் அவர்களை தன்னுடன் சேர்த்துக் கொள்கிறார்கள்.

சிலர், 'இந்த மாதம் உன் வீட்டில் இருக்கணும். அடுத்த மாதம் தான் என் வீட்டில் இருக்கணும்' என சகோதரருடன் சண்டை இடுகின்றனர். அவர்கள் கீழ்க்கண்ட சம்பவத்தை கேட்டால் திருந்துவர்.

ஒருமுறை அப்துல்லாஹ் என்பவர் நபிகள் நாயகத்திடம், ''சிறந்த செயல் எது'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''நேரம் தவறாமல் தொழுகை செய்வது'' என்றார்.

''இதற்கு அடுத்த நிலையில் உள்ள சிறந்த செயல் எது'' எனக் கேட்டதற்கு, ''பெற்றோருக்கு நன்றியுடன் இரு. அவர்களுக்கு வேண்டியதை செய்'' என்றார்.

மேலும் அவர், ''இறப்புக்கு பின் சுவனத்திற்கு செல்ல வேண்டும் என நினைப்பவர்கள், நிச்சயமாக பெற்றோருக்கு பணிவிடை செய்ய வேண்டும். அவர்களின் மனம் நொந்தால் நரகமே கிடைக்கும். அவர்கள் மன்னிக்கும்

வரை சுவனத்திற்குள் நுழையவே முடியாது'' எனக் கூறினார்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:35 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 5:00 மணி






      Dinamalar
      Follow us