தாம்பரம் - புதுடில்லி உட்பட 8 ரயில் போக்குவரத்தில் மாற்றம்
தாம்பரம் - புதுடில்லி உட்பட 8 ரயில் போக்குவரத்தில் மாற்றம்
ADDED : ஜூலை 12, 2024 11:44 PM
சென்னை:எழும்பூர் ரயில்வே யார்டில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளதால், எட்டு விரைவு ரயில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
மதுரை - நிஜாமுதீன் சம்பர்க் கிராந்தி, நள்ளிரவு 12:55 மணி விரைவு ரயில், நாளை மாற்றுப்பாதையாக, செங்கல்பட்டு, அரக்கோணம், பெரம்பூர் வழியாக இயக்கப்படும். தாம்பரம், எழும்பூர் நிலையம் வராது
லோக்மானிய திலக் - காரைக்கால் மதியம் 1:15 மணி வாராந்திர ரயில், இன்று திருத்தணி, செங்கல்பட்டு வழியாக செல்லும். பெரம்பூர், எழும்பூர், தாம்பரம் நிலையங்களுக்கு செல்லாது
நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள், அதிகாலை 5:20 மணி வாராந்திர ரயில், இன்று பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி, விழுப்புரம் வழியாக இயக்கப்படும்
திருச்சி - குஜராத் ஆமதாபாத், அதிகாலை 5:40 மணி சிறப்பு ரயில், மாற்றுப்பாதையாக செல்வதால், எழும்பூர் ரயில் நிலையத்தில் நிற்காது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்
செங்கல்பட்டு - தெலுங்கானா மாநிலம் காச்சிகுடா, நாளை மாலை 3:35 மணி விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்வதால், எழும்பூரில் நிற்காது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்
செங்கல்பட்டு - ஆந்திர மாநிலம் காக்கிநாடா, நாளை மாலை 4:00 மணி விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்வதால், எழும்பூரில் நிற்காது. கடற்கரை நிலையத்தில் நின்று செல்லும்
தாம்பரம் - புதுடில்லி நாளை மாலை 5:00 மணி ஜி.டி.விரைவு ரயில் மாற்றுப்பாதையில் செல்வதால் எழும்பூரில் நிற்காது. கடற்கரை நிலையத்தில் நின்று செல்லும்
தாம்பரம் - தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத், நாளை மாலை 5:30 மணி விரைவு ரயில், மாற்றுப்பாதையில் செல்வதால் எழும்பூரில் நிற்காது. கடற்கரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

