sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி அடுக்குமாடி வீடுகளில் கட்டாயம் மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு

/

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி அடுக்குமாடி வீடுகளில் கட்டாயம் மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி அடுக்குமாடி வீடுகளில் கட்டாயம் மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு

கழிவுநீர் சுத்திகரிப்பு வசதி அடுக்குமாடி வீடுகளில் கட்டாயம் மாசு வாரியத்திற்கு தீர்ப்பாயம் உத்தரவு


ADDED : பிப் 15, 2025 12:33 AM

Google News

ADDED : பிப் 15, 2025 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'அடுக்குமாடி குடியிருப்பு வளாகங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இருப்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், செங்குன்றம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் இல்லை. இதனால், நிலத்தடி நீர் மாசடைகிறது. காப்புக்காட்டுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, செங்குன்றத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க உத்தரவிட வேண்டும்' என, சுந்தரமூர்த்தி, சரஸ்வதி கோபாலன், பிரியா கோபாலன் ஆகியோர், 2022ல் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:

மனுதாரர்கள் குறிப்பிட்ட அடுக்குமாடி குடியிருப்பில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர், செங்குன்றம் காப்புக்காட்டிற்கு செல்வதை நிரந்தரமாக தடுக்க வேண்டும்.

சீரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

வடிகால் வசதி இருப்பதை, நீர்வளத்துறை உறுதி செய்ய வேண்டும். சம்பந்தப்பட்ட அடுக்குமாடி வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டு, கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள் இருப்பதை, தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் உறுதிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விதிமுறைகள் என்ன?



1பொது கட்டட விதிகளின் அடிப்படையில், 50 வீடுகளுக்கு மேல் வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க வேண்டும். இதில், 2.15 லட்சம் சதுர அடி வரையிலான கட்டட பரப்பளவுள்ள குடியிருப்புகளில், நாளொன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் திறன் உடைய நிலையங்கள் அமைக்க வேண்டும்

2கட்டுமான திட்ட அனுமதி பெறும் நிலையில், இதற்கான வடிவமைப்பு விபரங்களை தெரிவித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய ஒப்புதல் பெற வேண்டும்

3தற்போதைய நிலவரப்படி, நாளொன்றுக்கு, ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, 30 முதல், 50 லட்சம் ரூபாய் வரை செலவாகும்

4அடுக்குமாடி குடியிருப்புகளில் கட்டுமான நிறுவனங்கள், இதற்கான வசதியை ஏற்படுத்தினாலும், வீடு ஒப்படைப்புக்குப்பின் இதைத்தொடர்ந்து பராமரிப்பது. வீட்டு உரிமையாளர்கள் சங்கத்தின் பொறுப்பாகிறது. இந்த பொறுப்பை, சங்க நிர்வாகங்கள் சரியாக செய்கிறதா என்பதை கண்காணிக்க வேண்டியது, மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர்களின் பணி

5இதற்கான தொடர் பராமரிப்பு மற்றும் சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீரை மறுபயன்பாட்டுக்கு உட்படுத்துவது போன்றவற்றில் பிரச்னைகள் ஏற்படுகின்றன.






      Dinamalar
      Follow us