sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏர்போர்ட்டில் ரூ.1.03 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

/

ஏர்போர்ட்டில் ரூ.1.03 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.1.03 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்

ஏர்போர்ட்டில் ரூ.1.03 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்


ADDED : மே 30, 2024 02:26 AM

Google News

ADDED : மே 30, 2024 02:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி:சிங்கப்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட, 1.03 கோடி ரூபாய் கடத்தல் தங்கத்தை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சிங்கப்பூரில் இருந்து நேற்று காலை திருச்சிக்கு ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது.

அதில் வந்த பயணியரை, திருச்சி விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது சந்தேகத்துக்கிடமான முறையில் நடந்து கொண்ட, 50 வயது நபரை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர், வலி நிவாரண பேஸ்ட் வடிவில் தங்கத்தை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் மறைத்து எடுத்து வந்த 1.423 கிலோ தங்கத்தை கஸ்டம்ஸ் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கடத்தி வந்தவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us