sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 சவரன் பறிமுதல்

/

ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 சவரன் பறிமுதல்

ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 சவரன் பறிமுதல்

ஓசூரில் குவாரி உரிமையாளர் வீட்டில் ரூ.1.20 கோடி, 100 சவரன் பறிமுதல்


ADDED : ஏப் 01, 2024 04:22 AM

Google News

ADDED : ஏப் 01, 2024 04:22 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சீத்தாராம் மேடு ஜலகண்டேஸ்வரர் நகரை சேர்ந்தவர் லோகேஷ்குமார், 35; பேரண்டபள்ளியில் ஜல்லி கிரஷர் வைத்துள்ளார். மார்ச், 28ல் காரில் பெங்களூரு சென்றவர் மீண்டும் ஓசூர் திரும்பினார்.

ஜூஜூவாடி சோதனை சாவடியில், தேர்தல் பறக்கும் படையினர் அவரது காரில் சோதனை செய்து, உரிய ஆவணம் இல்லாத, 10 லட்சம் ரூபாயை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, ஓசூர் வருமான வரித்துறை இணை இயக்குனர் விஷ்ணு பிரசாத் தலைமையிலான ஆறு பேர் கொண்ட குழுவினர், நேற்று அதிகாலை, 3:00 மணி முதல் லோகேஷ் குமார் வீட்டில் சோதனை செய்தனர்.

சோதனை முடிந்தவுடன், காலை, 10:15 மணிக்கு, வருமான வரித்துறை அதிகாரிகள், லோகேஷ் குமார் வீட்டிலிருந்து ஒரு பெரிய டிராவல் பேக்கை, போலீசாரின் ரோந்து வாகனத்தில் மூக்கண்டப்பள்ளியில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக்கு எடுத்துச் சென்றனர். அங்கு அதில் கொண்டு வரப்பட்ட பணத்தை எண்ணியதில், 1.20 கோடி ரூபாய் இருந்தது. சோதனையில், 100 சவரன் தங்க நகைகளையும் பறிமுதல் செய்தனர்.

பேரண்டப்பள்ளியில் உள்ள அவரது கிரஷரிலும் சோதனை நடந்தது. லோகேஷ் குமார், கர்நாடகா மாநிலம், கே.ஆர்.புரா பா.ஜ., - எம்.எல்.ஏ., பசவராஜின் உதவியாளர் மஞ்சுநாத் மருமகன்.

எனவே, அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்தில் பணத்தை வழங்க, வீட்டில் பதுக்கி வைத்திருந்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

தி.மு.க., பிரமுகரிடம் ரூ.11 லட்சம் சிக்கியது

திருப்பூர் மாவட்டம், பல்லடம், கிடாத்துறையை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் சீனிவாசன், 45, வீட்டுக்கு கோவை வருமான வரித்துறை உதவி கமிஷனர் தலைமையிலான குழுவினர் சோதனை நடத்தியதில், அவரிடமிருந்து, 11 லட்சம் ரூபாய், ஏழு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பணம், ஆவணம் தொடர்பான விளக்கத்தை கொடுக்குமாறு அதிகாரிகள் சம்மன் கொடுத்துள்ளனர். இவர் சில மாதம் முன் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி தி.மு.க.,வில் சேர்ந்தார். ரியல் எஸ்டேட், மதுக்கடை பார் என, பல தொழில்களை செய்து வருகிறார். ஆளுங்கட்சி வி.ஐ.பி.,யுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் பதுக்கப்பட்டதாக சென்ற புகாரில் இந்த சோதனை நடந்துள்ளது.அதே போல, ஈரோடு தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டசபை தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் கொளத்துப்பாளையத்தில் நடத்திய வாகன தணிக்கையில், செந்தமிழ் செல்வன், 27, என்பவர் காரில் 10 லட்சம் ரூபாய் சிக்கியது.








      Dinamalar
      Follow us