உள்ளடக்கத்திற்கு செல்ல
ADDED : செப் 14, 2024 12:56 AM
அ நிறம் | அளவு
சென்னை:ஆவணி மாதத்தின் கடைசி முகூர்த்த நாள், வரும், 16ல் வருகிறது. இந்த நாளில், அதிக எண்ணிக்கையில், பத்திரங்கள் பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், அன்றைய நாளுக்கு வழக்கமாக, 200 டோக்கன் வழங்கப்படும் சார் பதிவாளர் அலுவலகங்களில், 300 டோக்கன் வரை வழங்கப்படும் என, பதிவுத்துறை அறிவித்துள்ளது.
அதற்கேற்ப, இணையதளத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. அடுத்த மாதம் புரட்டாசியில், பத்திர பதிவுக்கு மக்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்பதால், இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
