ADDED : ஏப் 18, 2024 12:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் நேற்று முன்தினம் வரை, 1,297.07 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
லோக்சபா தேர்தலையொட்டி, தமிழகம் முழுதும் ஆவணம் இல்லாமல் எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், நேற்று முன்தினம் வரை, 170.31 கோடி ரூபாய் ரொக்கம்; 6.12 கோடி ரூபாய் மதுபானம்; 1.10 கோடி ரூபாய் போதைப் பொருட்கள்; 1,083.77 கோடி ரூபாய் தங்கம், வெள்ளி, வைர நகைகள்; 35.76 கோடி ரூபாய் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

