sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கி மரணம்

/

பள்ளி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கி மரணம்

பள்ளி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கி மரணம்

பள்ளி மாணவர்கள் 2 பேர் காவிரியில் மூழ்கி மரணம்


ADDED : ஆக 26, 2024 04:35 AM

Google News

ADDED : ஆக 26, 2024 04:35 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவையாறு: தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ராஜா நகரைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிபிரசாத், 16; தஞ்சாவூரில், பிளஸ் -1 படித்து வந்தார்.

திருவையாறு, மேலவட்டம் பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம் மகன் பிரவீன், 12; திருவையாறில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று காலை 11:00 மணிக்கு ஹரிபிரசாத், பிரவீன் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்டோர், திருவையாறு அய்யப்பன் கோவில் படித்துறை காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது, தண்ணீரின் வேகத்தில் ஹரிபிரசாத், பிரவீன் அடித்துச் செல்லப்பட்டனர்.

நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு, சக நண்பர்கள் கரைக்கு வந்து பொதுமக்களிடம் தகவல் அளித்தனர். தண்ணீரில் இழுத்துச் செல்லப்பட்ட இருவரும் நீரில் மூழ்கினர்.

தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய சிறுவர்களை, இரண்டு மணி நேர போராட்டத்திற்கு பின் பிணமாக மீட்டனர். திருவையாறு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us