sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏப்ரல் 17, 18ல் 2,000 சிறப்பு பஸ்கள்

/

ஏப்ரல் 17, 18ல் 2,000 சிறப்பு பஸ்கள்

ஏப்ரல் 17, 18ல் 2,000 சிறப்பு பஸ்கள்

ஏப்ரல் 17, 18ல் 2,000 சிறப்பு பஸ்கள்


ADDED : மார் 29, 2024 06:48 AM

Google News

ADDED : மார் 29, 2024 06:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: லோக்சபா தேர்தலையொட்டி, அடுத்த மாதம், 17, 18ம் தேதிகளில், அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

நுாறு சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற இலக்கு நோக்கி, தேர்தல் ஆணையம் பணியாற்றி வருகிறது. பொது மக்கள் தங்களுக்கு ஓட்டு உள்ள ஊர்களுக்கு சென்று ஓட்டளிக்க வசதியாக, தமிழகம் முழுதும் சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம். அதன்படி, ஏப்ரல், 17, 18ம் தேதிகளில், மாவட்டங்கள் தோறும் பயணியரின் தேவைக்கு ஏற்ப விடிய விடிய சிறப்பு பஸ்கள் இயக்க உள்ளோம்.

சென்னையில் இருந்து முக்கியமான நகரங்கள் மற்றும் மாவட்டங்களுக்கு, 2,000க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களை இயக்க உள்ளோம்.

அரசு விரைவு பஸ்களில், 60 நாட்களுக்கு முன்பே, டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால், பொது மக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, www.tnstc.in எனும் இணையதளம் மற்றும் tnstc செயலி வாயிலாக முன்பதிவு செய்து பயணிக்கலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us