sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விவசாய பிரிவில் 20,000 மின் இணைப்பு

/

விவசாய பிரிவில் 20,000 மின் இணைப்பு

விவசாய பிரிவில் 20,000 மின் இணைப்பு

விவசாய பிரிவில் 20,000 மின் இணைப்பு


ADDED : மார் 29, 2024 09:30 PM

Google News

ADDED : மார் 29, 2024 09:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக மின்வாரியம், விவசாயத்திற்கு சாதாரணம் மற்றும் சுயநிதி பிரிவுகளில் மின் இணைப்பு வழங்குகிறது. சாதாரண பிரிவில் மின்சாரம், வழித்தட செலவு என அனைத்தும் இலவசம். சுயநிதி பிரிவில் மின்சாரம் இலவசம்; வழித்தட செலவை விவசாயிகள் ஏற்க வேண்டும்.

நடப்பு, 2023 - 24ம் நிதியாண்டில், 50,000 மின் இணைப்பு வழங்க திட்டமிடப்பட்டது. நாளையுடன் இந்த நிதியாண்டு முடிவடைய உள்ளது. இதுவரை, 20,000 இணைப்புகளே வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கடந்த டிசம்பரில் சென்னை மற்றும் அதை சுற்றிய மாவட்டங்களிலும்; திருநெல்வேலி, துாத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் எப்போதும் இல்லாத வகையில் அதீத கனமழை பெய்தது. வெள்ளப்பெருக்கால் அதிக மின் சாதனங்கள் சேதமடைந்தன.

எனவே, கையிருப்பில் இருந்த உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்த சாதனங்களை சீரமைக்கும் பணிக்கு முடுக்கி விடப்பட்டது.

இதனால் தான், விவசாய மின் இணைப்பு வழங்கும் பணி பாதிக்கப்பட்டது. அடுத்த இரு மாதங்களில், எஞ்சிய மின் இணைப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us