sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இலங்கை விடுவித்த 21 மீனவர்கள் சென்னை வந்தனர்

/

இலங்கை விடுவித்த 21 மீனவர்கள் சென்னை வந்தனர்

இலங்கை விடுவித்த 21 மீனவர்கள் சென்னை வந்தனர்

இலங்கை விடுவித்த 21 மீனவர்கள் சென்னை வந்தனர்


ADDED : ஆக 04, 2024 12:27 AM

Google News

ADDED : ஆக 04, 2024 12:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் இருந்த 21 தமிழக மீனவர்கள் சென்னை திரும்பினர்.

கடந்த ஜூலை முதல் வாரத்தில், எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, ராமநாதபுரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் என, 21 பேரை, இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அவர்களை விடுவிக்க கோரி, மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். இதையடுத்து, இந்திய துாதரக அதிகாரிகள், இலங்கை அரசிடம் பேச்சு நடத்தினர். இந்நிலையில், 21 மீனவர்களை விடுவிக்க, இலங்கை நீதிமன்றம் இரு தினங்களுக்கு முன் அனுமதி அளித்தது. அவர்கள் கொழும்பில் இருந்து நேற்று காலை விமானத்தில் சென்னை திரும்பினர்.






      Dinamalar
      Follow us