sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சந்தையில் விற்பனை செய்த 22 மருந்துகள் தரமற்றவை

/

சந்தையில் விற்பனை செய்த 22 மருந்துகள் தரமற்றவை

சந்தையில் விற்பனை செய்த 22 மருந்துகள் தரமற்றவை

சந்தையில் விற்பனை செய்த 22 மருந்துகள் தரமற்றவை


ADDED : மே 24, 2024 04:09 AM

Google News

ADDED : மே 24, 2024 04:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : சந்தையில் விற்பனையில் உள்ள 22 மருந்துகள் தரமற்றவை மற்றும் போலி என கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்துகளையும், மத்திய, மாநில மருந்து தர கட்டுப்பாட்டு வாரியங்கள் மாதந்தோறும் ஆய்வு செய்கின்றன. அதேபோன்று போலி மருந்துகள் கண்டறியப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மாதத்தில் சந்தையில் உள்ள மருந்துகளின் மாதிரிகளை, மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு செய்தது. இதில், காய்ச்சல், ஜீரண மண்டல பாதிப்பு, கிருமி தொற்று உள்ளிட்ட 17 மருந்துகள், தரமற்றவையாக இருந்தன.

அதேபோல், உயர் ரத்த அழுத்தம், பாக்டீரியா தொற்றுக்கு பயன்படுத்தப்படும் ஐந்து மருந்துகள், போலியானவையாக இருந்தது கண்டறியப்பட்டது. அதன்படி தரமற்ற மற்றும் போலி மருந்துகளின் விபரங்கள், https://cdsco.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.






      Dinamalar
      Follow us