sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

234 தொகுதிக்கும் மகளிரணி செயலர் பா.ம.க., முடிவு

/

234 தொகுதிக்கும் மகளிரணி செயலர் பா.ம.க., முடிவு

234 தொகுதிக்கும் மகளிரணி செயலர் பா.ம.க., முடிவு

234 தொகுதிக்கும் மகளிரணி செயலர் பா.ம.க., முடிவு


ADDED : ஆக 15, 2024 07:34 PM

Google News

ADDED : ஆக 15, 2024 07:34 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபை தேர்தலுக்குள் பா.ம.க.,வை பலப்படுத்த, 234 சட்டசபை தொகுதிகளுக்கும், மகளிரணி செயலர் நியமிக்கப்படுவர் என, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

பா.ம.க.,வின் கள செயல்பாடுகளை தீவிரப்படுத்தும் வகையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், தலா ஒரு தொகுதி செயலர், தலைவர் நியமிக்கப்படுவர் என, கடந்த 5ம் தேதி அறிவித்திருந்தார். மாவட்டச்செயலரும், தொகுதி செயலரும், தங்களின் செயல்பாடுகளில் ஒருவருக்கொருவர் குறுக்கிடாமல், கட்சி தலைமை கொடுக்கும் பணிகளை செய்ய வேண்டும் என்றும், அவர் கூறியிருந்தார்.

தொகுதி செயலர், தலைவரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட 7 குழுக்கள், தமிழகம் முழுதும் பயணம் செய்து வருகின்றன.

இந்நிலையில், 234 சட்டசபை தொகுதிகளுக்கும், மகளிரணிச்செயலர், தலைவரை நியமிக்க வேண்டும் என்று, ராமதாஸ் தற்போது கூறியுள்ளார். ஏற்கனவே நியமிக்கப்பட்ட தேர்வு குழுவினர் மகளிரணிச்செயலர், தலைவரையும் தேர்வு செய்வார்கள்.

தொகுதி செயலர், தலைவர், மகளிரணி செயலர், தலைவர் தேர்வில் பல்வேறு சமூகங்களுக்கும் பிரதிநிதித்துவம் வழங்கப்படுவதை, தேர்வுக் குழுக்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us