sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாம்பு, நாய்க்கடிக்கு 24 மணிநேர சிகிச்சை

/

பாம்பு, நாய்க்கடிக்கு 24 மணிநேர சிகிச்சை

பாம்பு, நாய்க்கடிக்கு 24 மணிநேர சிகிச்சை

பாம்பு, நாய்க்கடிக்கு 24 மணிநேர சிகிச்சை


ADDED : ஜூலை 25, 2024 12:37 AM

Google News

ADDED : ஜூலை 25, 2024 12:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆரம்ப சுகாதார நிலையங்களில், விஷமுறிவு மருந்து இருப்பதை உறுதி செய்வதுடன், 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கவும், தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் இந்தாண்டில் இதுவரை, நாய்க்கடியால், 2.43 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 22 பேர் உயிரிழந்துள்ளனர்; பாம்புக் கடியால், 7,310 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், 40 சதவீதத்துக்கும் மேலானோர் உயிரிழந்து இருக்கலாம் என, பொது சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக, அனைத்து மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், பாம்புக்கடிக்கான எ.எஸ்.வி., விஷமுறிவு மருந்து, குறைந்தபட்சம் 10 குப்பிகள்; நாய்க்கடிக்கான ஏ.ஆர்.வி., மருந்து, 20 குப்பிகளும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

இம்மருந்துகளை, 24 மணி நேரமும் கையிருப்பில் வைத்திருப்பதுடன், '108' அவசரகால ஆம்புலன்ஸ் சேவை உள்ளிட்ட சிகிச்சை அளிக்க தேவையான முன்னேற்பாடுடன் இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us