ADDED : ஜூன் 22, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:தமிழகத்தில் திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் மிக கன மழை பெய்யும். திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். மாலை மற்றும் இரவு வேளைகளில் இடி, மின்னல் காற்றுடன் திடீர் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்சம் 36 டிகிரி செல்ஷியஸ் வெப்ப நிலை பதிவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

