ராமநத்தம் அருகே கார் மோதி பாதயாத்திரை சென்ற 3 பேர் பலி
ராமநத்தம் அருகே கார் மோதி பாதயாத்திரை சென்ற 3 பேர் பலி
ADDED : பிப் 26, 2025 05:47 AM
ராமநத்தம்: ராமநத்தம் அருகே பாதயாத்திரை சென்ற 3 பக்தர்கள் கார் மோதி பரிதாபமாக இறந்தனர்.
கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த ஐவதுகுடியை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் கார்த்திகேயன்,18; சிவாஜி மகன் காசிவேல், 20; பாலு, 28; உறவினர்களான மூவரும் சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை பாதயாத்திரை புறப்பட்டனர். மாலை 4:00 மணியளவில், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், ராமநத்தம் அடுத்த எழுத்துார் அருகே நடந்து சென்றனர். அப்போது, அவர்கள் பின்னால் வேகமாக வந்த கார் திடீரென மோதியது. இதில், பலத்த காயமடைந்த கார்த்திகேயன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த காசிவேல், பாலு ஆகியோரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து ராமநத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
ஐவதுகுடியைச் சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.