sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போலீஸ் என கூறி ரயிலில் 316 கிராம் தங்கம் பறிப்பு

/

போலீஸ் என கூறி ரயிலில் 316 கிராம் தங்கம் பறிப்பு

போலீஸ் என கூறி ரயிலில் 316 கிராம் தங்கம் பறிப்பு

போலீஸ் என கூறி ரயிலில் 316 கிராம் தங்கம் பறிப்பு


ADDED : மார் 24, 2024 11:17 PM

Google News

ADDED : மார் 24, 2024 11:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேலுார் : கேரள மாநிலம், திருச்சூரை சேர்ந்தவர் சுதேஷ், 41; இவர், சென்னை மற்றும் பெங்களூருவில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரிடம் பணியாற்றுபவர் ராகுல், 30. இரு நாட்களுக்கு முன், 300 கிராம் தங்கக்கட்டி, 16 கிராம் தங்க காசு என, 316 கிராம் தங்கத்துடன், திருச்சூரிலிருந்து சென்னையிலுள்ள நகைக்கடைக்கு, ராகுல் பெங்களூரு மெயில் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றார்.

ரயிலில் போலீஸ் எனக்கூறி வந்த இருவர், ராகுலை சோதனையிட்டு, அவரது சட்டை பாக்கெட்டிலிருந்த தங்கத்தை எடுத்தனர். தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள போது, ஆவணமின்றி தங்கத்தை எப்படி எடுத்து வரலாம் என, கேள்வி எழுப்பினர். பின், விசாரணை நடத்த வேண்டும் என, காட்பாடி ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தில் ராகுலுடன் இறங்கினர். அவரது மொபைல் போனை வாங்கிக் கொண்டு, அங்கேயே இருக்குமாறு கூறிச் சென்றனர்.

நீண்ட நேரமாகியும் அவர்கள் வராததால், ஏமாற்றப்பட்டதை அறிந்த ராகுல், அவ்வழியாக சென்னை சென்ற மற்றொரு ரயிலில் ஏறி, சென்னை சென்று, தங்கம் பறிபோனது குறித்து சுதேஷிடம் கூறினார். காட்பாடி ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us