sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

"குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்": அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

/

"குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்": அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

"குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்": அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

"குடிநீர் பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காணுங்கள்": அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

22


UPDATED : ஏப் 27, 2024 04:03 PM

ADDED : ஏப் 27, 2024 01:22 PM

Google News

UPDATED : ஏப் 27, 2024 04:03 PM ADDED : ஏப் 27, 2024 01:22 PM

22


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கோடைக்காலத்தில் தடையின்றி குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் தமிழகம் முழுவதும் உள்ள நீர் நிலைகளில் நீர் இருப்பு நிலவரங்களை கேட்டறிந்தார்.

பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: தென் மேற்கு பருவமழை காலத்திலும், மழையளவு எதிர்பார்ப்பதை விட குறைவாகவே இருக்க கூடும் என இந்திய வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது. தற்போது அணைகளில் உள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்தி அடுத்த 2 மாதங்களுக்கு குடிநீர் தேவையை நிறைவு செய்ய வேண்டிய சூழ்நிலையில் நாம் உள்ளோம்.

குடிநீர் பிரச்னை நிலவக்கூடிய அனைத்து பகுதிகளுக்கும் சென்று, உடனடியாக தீர்வு காண வேண்டும். கூட்டுக் குடிநீர் திட்டங்களின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணித்து தடைகளின்றி பராமரித்திட வேண்டும். கோடை காலத்தில் தண்ணீரின் தேவை அதிகம், கிடைப்பது குறைவு என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

ரூ.150 கோடி ஒதுக்கீடு

குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.150 கோடி ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us