ADDED : ஜூலை 02, 2024 12:39 AM
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையில், தேசிய டாக்டர் தினத்தையொட்டி, சிறந்த டாக்டர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், 96 அரசு டாக்டர்கள், ஒன்பது தனியார் டாக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
இனி வரும் காலங்களில், டி.எம்.எஸ்., -- டி.பி.ஹெச்., - டி.எம்.இ., என, துறை வாரியாக தலா 10 டாக்டர்கள்; சித்தா அலோபதி துறையில், 10 டாக்டர்கள், தனியாரில், 10 டாக்டர்கள் என, ஆண்டுக்கு 50 டாக்டர்கள் சிறந்த டாக்டர்களாக தேர்வு செய்து கவுரவிக்கப்படுவர்.
தஞ்சாவூர் மற்றும் சென்னை கிண்டியில் அமைய உள்ள, குழந்தைகளுக்கான உயர் சிறப்பு சிகிச்சைக்கு, 250 கோடி ரூபாய்; மாற்றுத்திறனாளிகளுக்கான பிரத்யேக மருத்துவமனைக்கு, 50 கோடி ரூபாய்; மருத்துவ கல்லுாரி மாணவர்களின் வகுப்பறை மேம்பாட்டுக்கு, 50 கோடி ரூபாய் என, 350 கோடி ரூபாய்க்கான நிதியை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை வழங்குகிறது. இதற்காக, துணைவேந்தர் நாராயணசாமிக்கு நன்றி.
இவ்வாறு, அவர் கூறினார்.