sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 38 பேர் காயம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவிக்கரம்

/

தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 38 பேர் காயம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவிக்கரம்

தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 38 பேர் காயம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவிக்கரம்

தி.மு.க., கூட்டத்திற்கு சென்ற வேன் கவிழ்ந்து 38 பேர் காயம்; அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., உதவிக்கரம்


ADDED : மார் 24, 2024 11:19 PM

Google News

ADDED : மார் 24, 2024 11:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதி தி.மு.க., வேட்பாளர் மலையரசனை ஆதரித்து செயல் வீரர்கள் கூட்டம் கள்ளக்குறிச்சியில் நேற்று நடந்தது. கூட்டத்தில் பங்கேற்க, கொட்டையூர் காலனியை சேர்ந்த இரு ஆண்கள், 36 பெண்கள் என, 38 பேர், மினி சரக்கு வேனில் கள்ளக்குறிச்சி வந்தனர்.

அதே பகுதியை சேர்ந்த ராஜி, 29, வேன் ஓட்டினார். காலை, 10:30 மணியளவில் சேலம் - உளுந்துார்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் புதுமாம்பட்டு பிரிவு சாலை அருகே வந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்தில், 38 பேர் காயமடைந்தனர். அப்போது, அவ்வழியாக வந்த கள்ளக்குறிச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், காயமடைந்த பலரையும் தன் காரில் ஏற்றி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினார். தியாகதுருகம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us