ADDED : மே 30, 2024 04:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கடலுார் பழைய வண்டிப்பாளையம், குழந்தை காலனியை சேர்ந்தவர் சுரேஷ் மகன் நரேஷ்,20; டிப்ளமோ படித்துவிட்டு, கடலுார் முதுநகர் ஸ்வீட் கடையில் வேலை செய்கிறார்.
இவர் தான் காதலித்து வந்த 17 வயது சிறுமியை கடந்த 26ம் தேதி காலை தென்னம்பாக்கம் அழகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இதுகுறித்து கடலுார் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலர் இந்திரா அளித்த புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.