UPDATED : மார் 08, 2025 12:40 PM
ADDED : மார் 08, 2025 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகளில் சேர, தேசிய தகுதித் தேர்வான, 'நீட்' தேர்வை எழுத வேண்டும்.
இதற்கு விண்ணப்பிக்க நேற்றுடன் அவகாசம் முடிந்தது. விண்ணப்பங்களில், நாளை முதல், 11ம் தேதி வரை திருத்தங்களை செய்யலாம். மேலும் தகவல்களை, https://nta.ac.in/ என்ற இணையதளத்தில் அறியலாம்.