sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.1.50 லட்சம் திருடிய நடிகர் கைது

/

மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.1.50 லட்சம் திருடிய நடிகர் கைது

மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.1.50 லட்சம் திருடிய நடிகர் கைது

மதுரையில் போலீஸ் போல் நடித்து ரூ.1.50 லட்சம் திருடிய நடிகர் கைது

2


ADDED : மே 10, 2024 05:57 AM

Google News

ADDED : மே 10, 2024 05:57 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் தனியார் நிறுவன ஊழியரிடம் போலீஸ் எனக்கூறி சோதனை செய்வது போல் நடித்து' ரூ.1.50 லட்சம் திருடிய நாடக நடிகரை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அண்ணலக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் முருகன் 58. கதவுகளுக்கான கைப்பிடி தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார்.

அடிக்கடி மதுரை உட்பட தென்மாவட்டங்களில் விற்பனை செய்ததற்கான தொகையை வசூல் செய்வது வழக்கம். கடந்த ஏப்.,25ல் திருச்சியில் வசூல் செய்த ரூ.3.43 லட்சத்துடன் மதுரை வந்தார். இரவு 7:30 மணிக்கு கோபாலன் கொத்தன் தெருவில் நடந்து வந்தபோது, வழிமறித்த ஒருவர் தன்னை 'போலீஸ்' எனக்கூறி விசாரித்தார். கைப்பையை சோதனையிட வேண்டும் எனக்கூறி, சோதனை செய்துவிட்டு அனுப்பினார். சில அடி துாரம் சென்ற பின் சந்தேகப்பட்டு முருகன், தனது கைப்பையை பார்த்தபோது ரூ.1.50 லட்சம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து திலகர்திடல் போலீசில் புகார் செய்தார். கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் மதுரை திடீர்நகர் ஹரிகிருஷ்ணன் (எ) ஆறுமுகபாண்டி 55, திருடியது தெரிந்தது. அவரை நேற்று கைது செய்தனர். போலீசார் கூறுகையில் ''நாடக நடிகரான இவர், அடிக்கடி இதுபோன்று 'நடித்து' மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். சிறிய தொகை என்பதால் யாரும் புகார் கொடுக்கவில்லை. இது அவருக்கு வசதியாக போய்விட்டது. தற்போது பெரிய தொகை என்பதால் மாட்டிக்கொண்டார்'' என்றனர்.






      Dinamalar
      Follow us