செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி
செங்கோட்டை, நாகர்கோவில் ரயில்களில் கூடுதல் பெட்டி
ADDED : மார் 01, 2025 01:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தாம்பரம் - செங்கோட்டை மற்றும் தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர ரயில்களில், இன்று முதல் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன.
தெற்கு ரயில்வே அறிக்கை:
தாம்பரம் - செங்கோட்டை சிலம்பு விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் இன்று முதல் ஜூன் 18 வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி' - 2, சிலீப்பர் பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 1 என, கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்
தாம்பரம் - நாகர்கோவில் வாராந்திர விரைவு ரயிலில், இரு மார்க்கத்திலும் நாளை முதல் ஜூன் 17 வரை, இரண்டாம் வகுப்பு 'ஏசி' - 1, மூன்றாம் வகுப்பு 'ஏசி'- 2, சிலீப்பர் பெட்டி - 2, முன்பதிவு இல்லாத பெட்டி - 1 என, கூடுதல் பெட்டிகள் இணைத்து இயக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.