ADDED : மே 17, 2024 01:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:கோடை விடுமுறை கூட்ட நெரிசலை சமாளிக்க சில ரயில்களில் கூடுதல் ரயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
மே 17 முதல் 22 வரை சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயிலிலும் - 16127, மே 17 முதல் 23 வரை குருவாயூர் - சென்னை எழும்பூர் ரயிலிலும் - 16128, மே 16 முதல் 20 வரை திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா ரயிலிலும் - 16343, மே 17 முதல் 21 வரை மதுரை - திருவனந்தபுரம் அமிர்தா ரயிலிலும் - 16344, கூடுதலாக தலா ஒரு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

