ADDED : மார் 12, 2025 02:24 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: மாசி மாத முகூர்த்த நாளான இன்று, பத்திரப்பதிவுக்கு கூடுதல் டோக்கன்கள் வழங்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் சொத்து பரிவர்த்தனை தொடர்பான பத்திரங்களை, முகூர்த்த நாட்களில் பதிவு செய்ய, மக்கள் விரும்புகின்றனர். மாசி மாத முகூர்த்த நாளான இன்று, அதிக எண்ணிக்கையிலான பத்திரங்கள் பதிவுக்கு தாக்கலாகும். எனவே, கூடுதல் டோக்கன்கள் வழங்க, பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
இதன்படி வழக்கமாக, 100 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், இன்று 150 டோக்கன்கள் வழங்கப்படும். 200 டோக்கன்கள் வழங்கப்படும் அலுவலகங்களில், 300 டோக்கன்கள் வழங்கப்படும் என, பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவித்துள்ளார்.